Saturday, 8 June 2013

கவிஞர் வசந்த் செந்தில் மன்னித்துவிடுவார் என்ற நம்பிக்கையில்...

அத்தனை வாகனங்களும் கைவிட
நெடுஞ்சாலையின் கோடைதகிப்பில்
தொண்டை இறந்து நின்றிருந்தேன்.

க்ரக்ஸ் 5001 வண்டியினை ஓட்டியபடி
வந்தவர் தன்னிடமிருந்த நீரை
என்னை அருந்தச் சொன்னார்.

' நீங்கள் கடவுள்' என்றேன் உடைந்துபோய்.
'இல்லை.நான் ப்ரபாகர் சிவசுப்ரமணியன்' என்றார்
சிரித்தபடி.

வண்டியின் பின்னால் ஏறி
என் வசிப்பிடம் வந்து
கையசைத்து விலகிப்போகும்போது கவனித்தேன்

புன்னகைத்து நின்றிருந்தவர்
கடவுள் போலில்லை.
ப்ரபாகரன் சிவசுப்ரமணியன் போல்தான் இருந்தார்.

Prabhakar Sivasubramaniam
என்ன செய்யும் என்னை இந்த நட்பு
மடியேந்துகிறதுதலைகோதுகிறதுஅமுதூட்டுகிறது
என்ன செய்யும் என்னை இந்த நட்புசிரிப்பூட்டுகிறதுகளிப்பூட்டுகிறதுவிழிப்பூட்டுகிறது
என்ன செய்யும் என்னை இந்த நட்புதவிப்பூட்டுகிறதுசலிப்பூட்டுகிறதுவெறுப்பூட்டுகிறது
என்ன செய்யும் என்னை இந்த நட்புகரமேந்துகிறதுதரம் தாழ்த்துகிறதுசிரம் வீழ்த்துகிறது
என்ன செய்யும் என்னை இந்த நட்புஉளம் மீட்கிறதுஉடல் சேர்க்கிறதுஉயிர் கேட்கிறது
இன்னும் என்னை என்ன செய்யும்சாவு விளிம்பில் நிறுத்தி வைத்துதள்ளிவிடும் பாவனையில்தினம் விளையாடும் உன் நட்பு.


கணேசகுமாரன்