Saturday, 8 June 2013

கவிஞர் வசந்த் செந்தில் மன்னித்துவிடுவார் என்ற நம்பிக்கையில்...

அத்தனை வாகனங்களும் கைவிட
நெடுஞ்சாலையின் கோடைதகிப்பில்
தொண்டை இறந்து நின்றிருந்தேன்.

க்ரக்ஸ் 5001 வண்டியினை ஓட்டியபடி
வந்தவர் தன்னிடமிருந்த நீரை
என்னை அருந்தச் சொன்னார்.

' நீங்கள் கடவுள்' என்றேன் உடைந்துபோய்.
'இல்லை.நான் ப்ரபாகர் சிவசுப்ரமணியன்' என்றார்
சிரித்தபடி.

வண்டியின் பின்னால் ஏறி
என் வசிப்பிடம் வந்து
கையசைத்து விலகிப்போகும்போது கவனித்தேன்

புன்னகைத்து நின்றிருந்தவர்
கடவுள் போலில்லை.
ப்ரபாகரன் சிவசுப்ரமணியன் போல்தான் இருந்தார்.

Prabhakar Sivasubramaniam

No comments:

Post a Comment