Thursday, 28 March 2013
காதல் வலி
உலகின் எங்கோ
ஒரு மூலையில்
பெண்ணால் பாதிக்கபட்டு
அவள் நினைவால்
இன்றளவும்
மனம் கொதித்தால்
நாம் இருவரும்
நண்பர்களே .....
##################################
துடிக்கும் இதயத்திற்கு ஏனோ
தெரிவதில்லை-
துடிக்க வைத்ததும் அவள் தான்
தவிக்க வைத்ததும் அவள் தான்
துடிப்பும் தவிப்பும் வெவ்வேறல்ல என்றே
இயங்குகின்றது இதயதசைகள்
அவளை நினைத்து கொண்டிருக்கையில்......
Tuesday, 26 March 2013
.
நான் சாத்தான்.
வாலும் கொம்பும் இல்லாத சாத்தான்.
நான் கடவுளிடம் யாசித்து பெற்றவொரு
வசீகரப் புன்னகையால்
உலகின் முதல் பெண்
ஆப்பிள் கடித்தாள்.
உலகின் கடைசி பெண்ணும்
சயனைடு கலந்த பெப்சியை
பருக போகிறாள்.
ய்ய்ய்யாஆஆஆஆஆஅஹூஊஊஊஊஊஊ.
வாலும் கொம்பும் இல்லாத சாத்தான்.
நான் கடவுளிடம் யாசித்து பெற்றவொரு
வசீகரப் புன்னகையால்
உலகின் முதல் பெண்
ஆப்பிள் கடித்தாள்.
உலகின் கடைசி பெண்ணும்
சயனைடு கலந்த பெப்சியை
பருக போகிறாள்.
ய்ய்ய்யாஆஆஆஆஆஅஹூஊஊஊஊஊஊ.
அதன் மொழி அறிந்தவன்
வேற்று கிரகத்தில் வசிப்பதாக
வேற்று கிரகத்தில் வசிப்பதாக
சற்று முன்
மின்னஞ்சல் வந்தது....
மின்னஞ்சல் வந்தது....
Monday, 25 March 2013
அன்பைப் புரிஞ்சுக்கலையேனு வருத்தப்படுறது போல
முட்டாள்தனம் எதுவுமே இல்லை......
அடக்கடவுளே...
அன்பை உணரத் தெரியலையேனு எதிராளியைப் பார்த்து...
சிரிச்சுகிட்டுப் போயிகிட்டே இருக்கணும்!
அப்படி இல்லாம சகிச்சுக்கப் பழகினா...
அப்படி இல்லாம சகிச்சுக்கப் பழகினா...
ஒருகட்டத்துல அந்தச் சகிப்புத் தன்மை மேலயே நமக்கு சலிப்பு
வந்து,
அன்பா இருக்கற இயல்பிலேருந்து விலக ஆரம்பிச்சிருவோம்!
உணரத் தெரியாதவங்களை உணர்ந்து நடந்துக்கணுங்கறது...
உணரத் தெரியாதவங்களை உணர்ந்து நடந்துக்கணுங்கறது...
ரொம்பவே முக்கியம்!
Friday, 22 March 2013
பொம்பள பொறுக்கி.
அவனுக்கு..பொம்பள பொறுக்கி..
என்று ஊருக்குள்...பெயர்...
புருசனில்லாத பொன்னாத்தாவுடன் தொடுப்பு..
கூத்து கட்ட ஊருக்கு வந்த ரோசமணியுடன்....களிப்பு..
பெட்டிக்கடை கண்ணாத்தாவுடன் ஒரே இளிப்பு..
மீச மொளச்ச நாளேருந்து இதே பொழப்பு...
ஒரு நாள்..
ஊருக்கு புதுசா வந்தா ஒரு பிச்சி..
அரச மரத்தடில...இளிப்போட நின்னா
அவ அம்மணத்த ஊரே கூடி வேடிக்க பார்க்குது..
பொறுக்கி பய..
படார்ன்னு இடுப்பு வேட்டிய அவுத்து
அவளுக்கு போத்திவிட்டான்
துண்ட அவுத்து
இறுக்க கட்டிவிட்டான்..
அவம் பாட்டுக்கு
கண்ணாத்தா கடைக்கு போயி
பீடி குடு கண்ணாத்தான்னு..கேக்க...
எப்பவும் இளிக்குறவ..
ராசான்னு...கதறி..போட்டா... ..
என்று ஊருக்குள்...பெயர்...
புருசனில்லாத பொன்னாத்தாவுடன் தொடுப்பு..
கூத்து கட்ட ஊருக்கு வந்த ரோசமணியுடன்....களிப்பு..
பெட்டிக்கடை கண்ணாத்தாவுடன் ஒரே இளிப்பு..
மீச மொளச்ச நாளேருந்து இதே பொழப்பு...
ஒரு நாள்..
ஊருக்கு புதுசா வந்தா ஒரு பிச்சி..
அரச மரத்தடில...இளிப்போட நின்னா
அவ அம்மணத்த ஊரே கூடி வேடிக்க பார்க்குது..
பொறுக்கி பய..
படார்ன்னு இடுப்பு வேட்டிய அவுத்து
அவளுக்கு போத்திவிட்டான்
துண்ட அவுத்து
இறுக்க கட்டிவிட்டான்..
அவம் பாட்டுக்கு
கண்ணாத்தா கடைக்கு போயி
பீடி குடு கண்ணாத்தான்னு..கேக்க...
எப்பவும் இளிக்குறவ..
ராசான்னு...கதறி..போட்டா...
Subscribe to:
Comments (Atom)






