Sunday, 11 November 2012


                           .........சதுரங்க நாயகன்......


அடடா....நம் சொந்த வேலையில்...நம் கதாநாயகனை கவனிக்காம விட்டுட்டோம்...மன்னிப்பு ...மன்னிப்பு..மன்னிப்பு....
பக்கி பய என்ன பண்ணீருக்கான்னு பார்க்கலாமா...

அதே இடம்..அதே வாசனை...ம்ம்ம்

மதுவுக்குள் மூழ்கியவன்..எழுந்த இடம் அஸ்தினாபுரம்...
மதுபானக்கடை....அரண்மனை தார்பாராகியது.....மேசையை சூதாட்ட பலகையாக விரித்து...பகடை உருட்டப்படுகிறது....

பரிமாற வந்தவன் சகுனியாகி போகிறான்...

எத்தனை..?

ஆறு....

ஆஹ....6...

தோற்று விட்டாயடா..தர்மா...இழுத்து வாருங்கள்....ஐவரின்மனைவியை...

திரவுபதிக்கு ஒரு போன் பண்ணி பேசட்டா?

ஹலோ....நான் தோத்துட்டேன்...
சரி...உன்னை வைச்சுதான் ஆடினேன்...

அடபாவி யாரை கேட்டு ஆடின...ஏன் சுபத்ரா..இல்ல இடும்பிய வைச்சு ஆடிருக்கலாமல்ல...

சுபத்ராவ கேட்டா..அர்ச்சுன சும்மா இருப்பானா செவிட்டுல குத்துவான்....இடும்பியகேட்டா..ஹா...இந்த அரண்மனையவே இடிச்சுபோடுவான் பீம...
நீ பொது சொத்து....ஆகவே உன்னை பணையம் வைப்பது என் உரிமை...

கண்ணா......

அவர் கல்லாவுல உட்கார்ந்து இருக்கார்..இப்போதைக்கு வரமாட்டார்....

ராவணா...இந்த அண்ணன் தம்பிக தொல்லை தாங்க முடில என்னை கடத்திட்டு போயிரு...அசோகவனத்திலாவது நிம்மதியா இருக்கேன்..

ராவணன்  :- தாயே நான் சிவபக்தன் அல்லவா...வரம் கொடுப்பது என் வேலை...
இவங்க பிரச்சனை முடியும் வரை அசோக வனத்தில் தாரளமாக இருக்கலாம் வாருங்கள்...

அய்யோ..அய்யோ....திரவுபதிய..ராவணன் கடத்திட்டு போறான்..

ஹ...தர்மா..பாதில நீ எந்திரிக்க கூடாது...ஆட்டத்தை முடி....

நான் தோத்துட்டேன்...அதனால...இனி போர்தான்

பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

பீமனின் பொளண்ட்ரம் ஒலிக்கிறது.....ரத்தவெள்ளம்...யானை பிளிறல்...குதிரைகளின்..கனைப்பு.....வாள்,வேல் ஒலிகள்...

சர்வ நாசம்

மிஞ்சியது இரண்டு ராஜாக்கள்..மட்டுமே..

துரியா என்னை தனியாவிட்டு போகதே....கதறுகிறான் தர்மன்..

இல்லை என் வேசம் முடிஞ்சுது...என்னை கொல்லு....நான் போகணூம்..

யாருமே இல்லையே.....தேசத்துல..யாருமே இல்லையே....ஜெயிச்சவனுக்கு..எல்லாம் சொந்தம்...தனியா நிக்குறேனே...

சூதுப்பலகையில்.....வென்ற ராஜன் மட்டும் நிற்கிறான்....


சார் கடைய சாத்தனும்..போலீஸ் வருவாங்க....சகுனி....12 வயது குடும்பதலைவனாக மாற....அரண்மனை...மதுபான கடையாகிறது...

ம்ம்...ம்ம்ம்...சரி..

நாயகன் எழுத்து...பாதங்களையே பார்த்தவாறு நிதான நடைபோடு ... வெளியேறுகிறான்.....ஆளில்லாத ரோட்டில் ஒரு விளக்கு கம்பம் மட்டும்....


ஒவ்வொரு மனிதனும் எதையோ வென்று...எதையோ தோற்று..தனியாளாக போனான்...சதுரங்க நாயகன்....

படையோடு வந்தவன்...தனியனாக வாழ்வதும்..தனியனாக சாவதும்..இந்த உலகம் நிர்ணயித்த...கொடூரனியதிகளில் ஒன்று....


No comments:

Post a Comment